சஜித் பிறேமதாஸ தோல்வியடைந்த சோகத்தால் தற்கொலை செய்த குடும்பஸ்த்தா்..!

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸ தோல்வியடைந்த சோகத்தால் தற்கொலை செய்த குடும்பஸ்த்தா்..!

ஜனாதிபதி தோ்தலில் சஜித் பிறேமதாஸ தோல்வியடைந்ததை தாக்கிக் கொள்ள முடியாத நிலையில் குடும்பஸ்த்தா் ஒருவா் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளாா். 

இந்த சம்பவம் பொலனறுவை புலஸ்கம பகுதியில் நடைபெற்றுள்ளது. இதன்போது ந ஞ்சருந்தி தற்கொலை செய்தவா் 64 வயதான நபா் என தொியவந்துள்ளது.

இது தொடர்பில் மனைவி கருத்து வெளியிடுகையில், நாங்கள் திருமணம் செய்து 30 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் சண்டையிட்டதில்லை. 

எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிரேமதாஸ மீது கணவருக்கு அதிக அன்பு இருந்தது. அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சிகே ஆதரவு வழங்கினார். 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். 

சஜித் தோற்று விடுவார் என்ற பயத்தில் அவர் நன்கு குடித்தார். பின்னர் தோல்வியடைந்த விடயம் தெரிந்தவுடன் 

அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷமருந்தியுள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது காப்பாற்ற முடியாமல் போய் விட்டது எனத் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு