கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய இராணுவம்..! விசுவமடுவில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய இராணுவம்..! விசுவமடுவில் சம்பவம்.

கிளிநொச்சி- விசுவமடு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 51 வயதான் பெண்மணியை இராணுவத்தினர் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விசுவமடு தொட்டியடி பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ஆழமான கிணற்றிற்குள் 51 வயதான குடும்பப் பெண்ணொருவர் விழுந்து விட்டதாக பிரதேசவாசிகள், 

அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற இராணுவத்தினர் அப் பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

தொட்டியடியில் அமைந்துள்ள 6வது சிங்க ரெஜிமெண்ட் சிப்பாய்களே குறித்த பெண்ணை காப்பாற்றினர். இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம்தேறி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு