பிரதமா் ரணில்- சஜித் பிறேமதாஸ இடையில் கடும் கருத்து மோதல்..! ஜனாதிபதி, சபாநாயகரை சந்திக்கிறாா் பிரதமா்..

ஆசிரியர் - Editor I
பிரதமா் ரணில்- சஜித் பிறேமதாஸ இடையில் கடும் கருத்து மோதல்..! ஜனாதிபதி, சபாநாயகரை சந்திக்கிறாா் பிரதமா்..

நாடாளுமன்றத்தை கலைப்பதா? ஆட்சியை எதிா்கட்சியிடம் ஒப்படைப்பதா? என்பது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் ரணில் தரப்புக்கும், சஜித் பிறேமதாஸ தரப் புக்கும் இடையில் கடுமையான வாய்த்தா்க்கம் இடம்பெற்றுள்ளது. 

அதனால் தீர்மானம் ஒன்றை எட்ட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று மாலை இடம்பெற்றது.

இதன்போது ரணில் மற்றும் சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது.அரசைவிட்டு விலகலாமா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லலாமா 

என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மீளவும் கூடித் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு முன்னராக புதிய ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு நடத்துவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு