அமைச்சு பதவியை பொறுப்பேற்கமாட்டேன்..! டக்ளஸ் தேவானந்தா அதிரடி..

ஆசிரியர் - Editor I
அமைச்சு பதவியை பொறுப்பேற்கமாட்டேன்..! டக்ளஸ் தேவானந்தா அதிரடி..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலமையிலான அமைச்சரவையில் பங்கெடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் செயலாளா் நாயகம், நாடாளுமன்ற உறு ப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

புதிய ஜனாதிபதி தமது அரசின் கீழ் அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அமைச்சு பொறுப்பை ஏற்கமாட்டேன். தோ்தல் பிரச்சாரத்தின்போது என்னை நம்புங்கள் என மக்களிடம் கூறினேன்.

ஆனாலும் என்னை நம்பி மக்கள் வாக்களிக்கவில்லை. ஈ.பி.டி.பி ஆதரவாளா்களும் கூட வாக்களிக்கவில்லை. இதனால், அமைச்சு பதவியை ஏற்பதில்லையென முடிபு செய்திருக்கி்ன்றேன். மேலும் தமிழ் மக்களின் அன்றாட மற்றும்

அரசியல் பிரச்சனைகளிற்கு சாத்தியமான தீர்வை உள்ளடக்கிய ஆவணமொன்றை கோட்டாபயவிற்கு வழங்கியிருந்தோம். அவர் அதற்கு இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையில், சொல்வதை செய்யும் அரசியல் பொறுப்புணர்வுள்ளவன் 

என்ற ரீதியில், என்னை நம்பி வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டேன். இந்த மக்களின் விடிவிற்காக ஆயுத வழியிலும், பின்னர் ஜனநாயக வழியிலும் நீண்ட போராட்டத்தை நடத்திவரும் எனக்கு, இந்த மக்களின் பிரச்சனைகளை 

தீர்ப்பதில் அதிக பொறுப்பும், அக்கறையும் இருந்து வருகிறது. வெற்றிபெறும் வேட்பாளரை ஆதரித்து, சாத்தியமான வழிகளில் பிரச்சனைகளை தீர்ப்பதே புத்திசாலித்தனம். வெற்றி வேட்பாளரின் வெற்றியில் பங்குதாரர்களாக 

மாறுவதன் மூலம், பிரச்சனைகளை தீர்க்க எனக்கு அங்கீகாரம் தாருங்கள் என்றுதான் நான் கோரிக்கை விடுத்தேன். எனினும், தேர்தலிற்கு முன்னதாக தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கோட்டாபய பீதியை உருவாக்கினர். 

மக்கள் வாக்களிக்காத நிலையில், நான் அமைச்சு பதவியை ஏற்கும் தார்மீக தகுதியில்லை யென நினைக்கிறேன். அமைச்சு பதவி மட்டுமே எமது நோக்கமென்றால் எமது கட்சி வேறுவிதமாக இருந்திருக்கும். 

அரசியல் நேர்மை எனக்கு முக்கியம். அதனால், அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை பெற்ற பின்னரே அமைச்சு பதவியை ஏற்கவே விரும்புகிறேன். அமைச்சு பதவியை ஏற்கும்படி, அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதை நான் ஏற்கவில்லை என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு