வெற்றுக் காணியிலிருந்த கை குண்டை எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற சிறுவன்..! பெற்றோாின் சாதுாியத்தால் உயிா்தப்பினான்.

ஆசிரியர் - Editor I
வெற்றுக் காணியிலிருந்த கை குண்டை எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற சிறுவன்..! பெற்றோாின் சாதுாியத்தால் உயிா்தப்பினான்.

மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து கை குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

இருதயபுரம் 10 ம் குறுக்கு வீதியிலுள்ள குறித்த பாழடைந்த வெற்றுக்காணியில் அருகில் சிறுவர்கள் நேற்று பகல் விளையாடிக்கொண்டிருந்த போது 

குறித்த வெற்றுக்காணிக்குள் பந்து வீழ்ந்ததையடுத்து அங்கு சென்ற சிறுவர் பந்தை தேடும் போது பந்து வடிவிலான குண்டு ஒன்றை கண்டு அதனை எடுத்து 

வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பந்து என காட்டிய போது அதனை கண்ட பெற்றோர் சிறுவனிடம் இருந்து அதனை பறித்து குறித்த வெற்றுக் காணியில் 

வீசியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து குறித்த குண்டு தொடர்பாக இரவு 7 மணியளவில் 

பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிசார் கைவிடப்பட்டிருந்த கைக் குண்டை மீட்கும் நடவடிக்கையில் 

ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு