வாக்காளிப்பதற்கு மக்களை ஏற்றிவந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு..! மன்னார்- தந்திரிமலை பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாக்காளிப்பதற்கு மக்களை ஏற்றிவந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு..! மன்னார்- தந்திரிமலை பகுதியில் சம்பவம்..

புத்தளம் மாவட்டத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்புக்கான மக்களை ஏற்றிவ ந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ள நிலை யில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முனைஸ் பாருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,புத்தளத்தில் உள்ள மன்னார் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நேற்று இரவு புத்தளத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர்.இதன்போது புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.எனினும், இத்தாக்குதலில் எவ்வித உயிர் சோதங்களின்றி சாரதியின் சாதூரியத்தால் பாதுகாக்கப்பட்டு 

முன்னேறி வரும்போது பலதடைகள் ஏற்பட்டது.எனினும், பேருந்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் தொடராக பயணித்த ஏழு பேருந்துகளை பாரிய மரங்களைக் கொண்டு பயணத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.இச்சம்பவம் 

தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடைகள் இடப்பட்ட மரங்களை பொலிஸார் மக்களின் உதவியோடு அகற்றப்பட்டு மக்கள் பாதுகாப்பாக மன்னார் பிரதான வீதிக்கு அனுப்பட்டனர்.

மேலும் இச்சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட மூன்று பேருந்துகள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடு பாதிவு செய்யப்பட்ட பின் குறித்த பேருந்துகள் விடுவிக்கப்பட்டது. குறித்த மக்கள் பாதுகாப்பாக மன்னார் வந்துள்ளனர்.

10 பேரூந்துகளில் பயணித்த மக்களே அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.ஏனைய பேருந்துகளில் வந்த மக்கள் பாதுகாப்பாக வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு