ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ பயணித்த ஹெலி தரையிறங்கும்போது அனர்த்தம்! பெண் ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ பயணித்த ஹெலி தரையிறங்கும்போது அனர்த்தம்! பெண் ஒருவர் காயம்..

ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ பயணித் த உலங்கு வானூர்தி தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று சஜித் பிரேமதாஸவின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக அவர் விசேட ஹெலிகொப்டரில் அங்கு சென்றார்.

இந்த ஹெலிகொப்டர் பொலன்னறுவை சீவலி வித்தியாலய மைதானத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டபோது, அருகிலிருந்த வீடொன்றின் கூரையில் சேதம் ஏற்பட்டதாகவும் பெண் ஒருவருக்கும் அதனால் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் பிரசார கூட்டமொன்றிற்கு குருநாகலை நோக்கிச் சென்ற சஜித் பிரேமதாஸ பயணித்த ஹெலிகொப்டர் தரையிறக்கம் செய்ய முற்பட்டபோது விபத்தில் சிக்கவிருந்த போதிலும் மயிரிழையில் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு