யாழ்.நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து..! குற்றுயிராக இளைஞன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து..! குற்றுயிராக இளைஞன் வைத்தியசாலையில்..

யாழ்.பொருளியல் கல்லூரிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

பாதுகாப்பற்ற புகைரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயற்சித்தபோதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. 

இந்த விபத்தில் யாழ்.நகரில் உணவகம் நடாத்திவரும் இளம் குடும்பஸ்த்தர் ஒருவரே படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார். 

இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றபோது ரயில் எச்சரிக்கை ஒலி எழுப்பவில்லை. என குற்றஞ்சாட்டும் மக்கள்,

இந்த ரயில் கடவையில் இதேபோன்று 10ற்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ரயில் திணைக்களம் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை. எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு