நல்லுாா்- சங்கிலியன் பூங்காவில் மாபெரும் எழுச்சி கூட்டம்..! களத்தில் இறங்குகிறாா் இரா.சம்மந்தன்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா்- சங்கிலியன் பூங்காவில் மாபெரும் எழுச்சி கூட்டம்..! களத்தில் இறங்குகிறாா் இரா.சம்மந்தன்..

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நாளை மாலை 3 மணிக்கு நல்லுாா்- சங்கி லியன் பூங்கா வளாகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாாிய பிரச்சார கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் நாடாளுமன்ற உறுப்பினா் இரா.சம்மந்தன் மற் றும் தமிழரசு கட்சியின் தலைவா், நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ சேனாதிராஜா மற்றும் 

நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள், பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினா்கள் கலந்து கொள்ளவுள்ளது. இந்த கூட்டத்தில்,

* புதிய அரசியல் அமைப்பு 

  பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத நாட்டிற்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தல் .

* மாகாண சபைகளிற்கு தேவையான நிதிகளை ஈட்டுவதற்கும் பயன்படுத்துவதற்குமான அதிகாரம்.

*  இடம்பெயர்ந்தவர்களிற்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு வசதிகள் .

*. விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்படுவர்.

* காணாமல்போனோர் தொடர்பான நடவடிக்கை.

* போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கான நிவாரணம்.

ஆகியவிடயங்களை வலியுறுத்தப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு