வடமாகாணசபை முன்னாள் உறுப்பினருக்கு விசாரணை..! TID அழைப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினருக்கு விசாரணை..! TID அழைப்பு..

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாின் விசாரணைக்கு வருமாறு வடமாகாண சபை முன்னாள் உறுப்பினா் சபா குகதாஸனை பொலிஸாா் அழைத்துள்ளனா். 

கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவின் 2 மாடிக்கு நாளை 13 ஆம் திகதி புதன்கிழமை வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-யாழ்.சுழிபுரத்தில் உள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸின் வீட்டிற்கு 

கடந்த 9ஆம் திகதி சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அழைப்பாணையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் 

விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு