திரைப்பட பாணியில் படகு விபத்து..! மன்னாா் கடலில் இளைஞன் பாிதாபகரமாக உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
திரைப்பட பாணியில் படகு விபத்து..! மன்னாா் கடலில் இளைஞன் பாிதாபகரமாக உயிாிழப்பு..

மன்னாா்- சிலாவத்தை கடலில் மீன்பிடிக்க சென்ற 28 வயது இளைஞன் கடலில் படகு விபத்தில் சிக்கி உயிாிழந்துள்ளான். 

இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற யாக்கோபு ரெஜினோல்ட்( வயது 28) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் மீன்பிடித்துவிட்டு கடலில் வந்துகொண்டிருந்தபோது பழுதாகிய வேறொரு படகிலிருந்து உதவி கோரினர். 

அதனால் இவர் அக் குறித்த எந்திர கோளாறாகிய படகை திருத்திக் கொண்டிருந்தபோது எந்திரத்தில் இருந்து பாய்ந்த தகடு ஒன்று 

எதிர்பாராதவிதமாக அவர் கையிலும் கழுத்திலும் மிக ஆழமாக இறங்கியுள்ளது. இதனால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இவரது உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை 

பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு