கட்டுப்பாடற்ற வேகம்..! கப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.. இளம் குடும்பஸ்த்தல் ஸ்த்தலத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! கப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.. இளம் குடும்பஸ்த்தல் ஸ்த்தலத்திலேயே பலி..

கிளிநொச்சி- முறிப்பு பகுதியில் கப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோ தி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சி முறிப்பு பாடசாலைக்க முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். 

பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு