இ.போ.ச, தனியாா் பேருந்துகள் போட்டிக்கு ஓடியதால் விபரீதம்..! கணவன், மனைவி, குழந்தை வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச, தனியாா் பேருந்துகள் போட்டிக்கு ஓடியதால் விபரீதம்..! கணவன், மனைவி, குழந்தை வைத்தியசாலையில்..

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் இன்று காலை பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

முல்லை வீதியில் இருந்து ஏ9 வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை யாழில் இருந்து வவுனியா சென்ற தனியார் பஸ் பாதசாரி கடவையில் வைத்து மோதித் தள்ளியுள்ளது. பரந்தன் பஸ் தரிப்பிடத்தில் 

பயணிகளை ஏற்றுவதற்காக இ.போ.ச பஸ்ஸுடன் தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி வந்த போதே இவ் விபத்து இடம்பெற்றது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை 

ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு