கோட்டாபாய ராஜபக்சவின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆதரவாளா் பாலியல் பலாத்காரம்..!

ஆசிரியர் - Editor I
கோட்டாபாய ராஜபக்சவின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆதரவாளா் பாலியல் பலாத்காரம்..!

கோட்டாபாய ராஜபக்ஸவின் தோ்தல் பிரச்சாரத்திற்காக சென்ற மனநலம் பாதிக்கப் பட்ட பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். 

குறித்த யுவதியை தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்துச் சென்ற ராஜபக்சக்களின் ஆதரவு இளைஞர்களினாலேயே இந்த துஸ்பிரயோக சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது மனைவியுடன் கூட்டத்திற்கு சென்ற மகள் இரவு 11 மணி வரை வீடு திரும்பவில்லை என யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவியும் மகளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர், ஹெம்மாத்தகம, 

எல்பிட்டிய பாலவத்தகம பிரதேசத்தில் காட்டுப் பகுதி ஒன்றில் யுவதியை பேருந்தில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுவதியை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி மருத்துவ அறிக்கையை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு