பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றவே சஜித்தை ஆதாிக்கிறது கூட்டமைப்பு..! தலையை பிய்க்கும் கோட்டா..

ஆசிரியர் - Editor I
பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றவே சஜித்தை ஆதாிக்கிறது கூட்டமைப்பு..! தலையை பிய்க்கும் கோட்டா..

தமிழீழ விடுதலை புலிகளின் கோாிக்கையை சஜித் பிறேமதாஸ ஊடாக நிறைவேற்ற லாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு கனவு காண்கிறது. நாட்டை பிாிப்பதற்கு நாம் இ டமளிக்கமாட்டோம். என ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய கூறியுள்ளாா். 

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், சமஸ்டிக்கு அப்பாற்சென்ற நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான தீர்வுத்திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததோடு நேற்றைய தினம் அதனை 

உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக வடக்கு, கிழக்கிலும் அதேபோல பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்தினபுரியில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டைப் பிரிப்பதற்கான யோசனையை சஜித் பிரேமதாஸ ஏற்றுக்கொண்டதினால்தான் அவருக்கான ஆதரவை கூட்டமைப்பினர் அறிவித்திருப்பதாக சாடினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு