கிளிநொச்சியில் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காய்ச்சல், வயிற்­றோட்டம், வாந்தி என்­ப­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளிகள் மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அதி­க­ளவில் சிகிச்சை பெற்று வரு­வ­தாகவும், முக்­கி­ய­ மாக இதன் தாக்­கத்­துக்கு அதி­க­ளவு சிறு­வர்கள் உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் 

வைத்­தி­ய­சாலை தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன. இதனால் வைத்­தி­ய­சா­லையின் வெளி­நோ­யாளர் பிரிவில் வழ­மைக்கு மாறாக அதி­க­ள­வான நோயா­ளர்கள் நாளாந்தம் சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும், 

அதில் பெரும்­பா­லா­ ன­வர்கள் விடு­தியில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது மாவட்­டத்தின் நுளம்பு பெருக்கம் அதி­க­ரித்­துள்­ள­தோடு ஈக்­களின் பெருக்­கமும் அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது. 

எனவே சுற்­றுப்­பு­றச்­சூ­ழலை சுத்­த­மாக பேணு­வ­ தோடு நன்கு சுட்­டா­றிய நீரை குடிப்­ப­தற்கு பயன்­ப­டுத்­து­மாறும் சிறுவர்கள் மலசல கூடத்திற்கு சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு கழுவுமாறும் 

சுகாதார துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு