ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை முன் சத்தியாக்கிரகம்!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை முன் சத்தியாக்கிரகம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனரது உறவினர்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை சுமார் ஒரு மணித்தியாலம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும், அதனைத் தொடர்ந்து அலரி மாளிகைக்கு முன்னாலும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதன் போது தனது கோரிக்கைகளை அடங்கிய மகஜரையும் அவர் ஜனாதிபதி செயலகத்திலும் அலரி மாளிகையிலும் கையளித்துள்ளார் என அவரது பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு