தெற்கு அரசியல்வாதிகளின் வேட்டிகளை நனைய வைக்கும் சந்திாிக்கா..!

ஆசிரியர் - Editor I
தெற்கு அரசியல்வாதிகளின் வேட்டிகளை நனைய வைக்கும் சந்திாிக்கா..!

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மாற்று அணியை கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந் திாிக்கா தலமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற மாபெரும் மாநாடு தெற்கு அரசியலில் பெரும் அதிா்வலைகளை உண்டாக்கியுள்ளதுடன். 

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்கும் போராட்டத்தில் சந்திரிக்கா ஈடுபட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா பண்டாரநாயக்க 

குமாரதுங்கவின் தலைமையிலான மாநாடு நேற்று சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது.மாநாட்டில் பாரிய அளவிலானோர் கலந்து கொண்டமை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் 

அதிர்ச்சி அடைந்துள்ளது. சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த உறுப்பினர்களே நேற்றைய மாநாட்டில் கலந்து கொண்டனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இந்த மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, எந்த ஒரு காரணத்திற்காகவும் தான் 

தாமரை மொட்டிற்கு வாக்களிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.சந்திரிக்கா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய மாநாட்டில் 

பெருமளவு உறுப்பினர்கள் கலந்து கொண்டமை மஹிந்த அணிக்கு பெரும் பின்னடைவு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை நேற்றைய மாநாட்டிக்கு பெருமளவு உறுப்பினர்கள் 

கலந்து கொள்ளவில்லை எனவும், அது தோல்வியில் முடிவடைந்ததாக மஹிந்த ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு