வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (29) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, இன்று காலை- 08.00 மணி முதல் மாலை- 05.00 மணி வரை யாழ். சுன்னாகம் இலங்கை வங்கிப் பிரதேசம், புனிதநகர், மாதனை, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, சிவப்பிரகாசம் மூன்றாம் குறுக்குத் தெரு, பருத்தித்துறை வெளிச்சவீடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு