மோட்டார் சைக்கிள் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைப்பு -

ஆசிரியர் - Editor II
மோட்டார் சைக்கிள் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைப்பு -

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் தெரியாத நபர்ல்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா 5ஆம் வட்டாரத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்தை மறைத்த நிலையில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுள்ளதாகவும், இது தொடர்பான காணொளி அருகாமையில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு