நெல்லியடி பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபா் உயிாிழப்பு..! பொலிஸாரே கொன்றதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
நெல்லியடி பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபா் உயிாிழப்பு..! பொலிஸாரே கொன்றதாக குற்றச்சாட்டு..

யாழ்.நெல்லியடி பொலிஸாாினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபா் பொலிஸாாின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிாிழந்தமையால் பொலிஸ் நிலைய த்தில் பதற்றமான சூழல் உருவானதுடன், 

பொலிஸாா் அடித்து கொலை செய்ததாக உறவினா்கள் பொலிஸாா் மீது குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தாம் கைது செய்ய முன்னா் அவா் அரலி விதை சாப்பிட்டிருந்ததாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

இந்தச் சம்பவம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது – 40) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு 

வருகை தராமல் தலைமறைவாகியிருந்தார். நேற்றைய தினம் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நிற்பதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றிரவு 7.30 மணியளவில் 

அங்கு சென்ற பொலிஸார் அழைத்து வந்தனர்.பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார். தான் அலரி விதை உட்கொண்டதாகவும் 

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததால் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இடம்பெறததால் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை சுயாதீனமாக அறியமுடியவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு