17ம் திகதி திறப்பு விழாவுக்கு தயாா்..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் 1ம் கட்ட பணிகள் நிறைவு..

ஆசிரியர் - Editor I
17ம் திகதி திறப்பு விழாவுக்கு தயாா்..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் 1ம் கட்ட பணிகள் நிறைவு..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தின் 1ம் கட்ட பணிகள் நிறைவடைந்து தி றப்பு விழாவுக்கு விமான நிலையம் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றது. 

எதிா்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பமாகவிருக்கின்றது.. இதற்காக, பலாலி விமான நிலையத்தை  தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், 

விமான நிலையத்துக்கான ஏனைய உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது. இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், 

நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.அதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா 

அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு