ரயிலுடன் மோதி பெண் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
ரயிலுடன் மோதி பெண் உயிாிழப்பு..!

நாவலப்பிட்டி பகுதியில் பெண் ஒருவா் புகைரதத்துடன் மோதி உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

நாவலப்பிட்டி - வரக்காவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் மோதியுள்ள பெண் 

சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். ரம்பொட - வெதமுள்ள தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய செல்லத்துரை கோபிகா எனப்படும் 

பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் புகையிரத பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போதே 

இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் , குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் புகையிரதத்தில் மோதியுள்ளாரா 

என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நவலப்பிட்டி 

வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை நவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு