பௌத்த மதம் முதன்மையானது என்று நாங்கள் ஒருபோதும் ஏற்கமுடியாது!

ஆசிரியர் - Admin
பௌத்த மதம் முதன்மையானது என்று நாங்கள் ஒருபோதும் ஏற்கமுடியாது!

பௌத்த மதம் முதன்மையானது என்று நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கலுக்கு எதிராக இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நல்லை ஆதீன முன்றலில் இன்று இடம்பெற்ற,போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி இந்தியா மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

பெளத்தமத ஆதிக்கத்தினால் இது பௌத்த நாடு என்று கூறிக்கொண்டு எங்கள் மீது மிகப்பெரிய அடக்குமுறை எங்கள் மீது சுமத்தப்படுகிறது. ஒரு அரசனுடைய அரசியலமைப்பிலேயே பௌத்தமதம் முதன்மையானது இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். இந்து ஆலயங்கள் போர்க்காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி அளிக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது. இதேபோலத்தான் தற்போது மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் நுற்றுக்கணக்கான மதங்கள் இனங்கள் பிராந்தியங்கள் இருக்கின்றபோது அங்கு இந்து மதத்தினர் பொரும்பாலாக இருந்த போதிலும் கூட இந்த நாடு மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பு ரீதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பாலாக உள்ளதனால் பௌத்த மதத்தை அனைவரும் எற்றுக் கொள்ளவேண்டும். அது தான் முதன்மை மதம் அரச மதம் எனக் கூறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். மதங்கள் சமத்துவமாக இருக்கவேண்டும். மத நம்பிக்கையுள்ளவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

இதையொட்டி நாங்கள் சர்வதேச ரீதியாகவும் குறிப்பாக இந்திய நாடும் இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

மக்களின் விடுதலைக்காகவும் மதங்களின் சமத்துவத்திற்காகவும் தொடந்தும் நாங்கள் பாடுபடுவோம். இதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு