யாழ். நல்லூர் கந்தன் திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு 'சோதனை'! - கூடங்கள் தயார்

ஆசிரியர் - Admin
யாழ். நல்லூர் கந்தன் திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு 'சோதனை'! - கூடங்கள் தயார்

யாழ். நல்லூர் கந்தன் திருவிழா காலத்தில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்துக் கொடுத்துள்ளது.

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸார் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்ட சோதனைக் கூடங்களை மாநகர முதல்வர், ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

ஆலயத்திற்கான நான்கு நுழைவாயில்களிலும் தலா இரு சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன , இச்சோதனைக் கூடங்களை அமைப்பதற்காக மாநகர சபைக்கு 03இலட்சம் ரூபா வரை செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு