யாழ். நல்லூர் ஆலய பின்வீதியில் இளைஞர்கள் இருவர் கைது!

ஆசிரியர் - Admin
யாழ். நல்லூர் ஆலய பின்வீதியில் இளைஞர்கள் இருவர் கைது!

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று மாலை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இச்சம்பவத்திற்கு முன்னர், வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தொலைபேசியில் வேறு ஒருவரைத் தொடர்புகொண்டு சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சென்றுள்ளனர்.

அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த போது அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க இலக்கத் தகடு WP என மேல் மாகாண பதிவு இலக்கமாகவும், பின்பக்க இலக்கத் தகடு CP என மத்திய மாகாண பதிவு இலக்கமாகவும் காணப்பட்டது. இதனை ஆராய்ந்த போது, போலி இலக்கத் தகடுகள் என கண்டறியப்பட்டது.

அத்துடன், இளைஞர்களில் ஒருவரின் தலைக்கவசத்தின் முகப்புக் கண்ணாடி கறுப்பு பட்டியால் மறைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. அதனால் இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு