ஆசைப்பட்டு வாங்கிய பதவிக்கு மீண்டும் ஆப்பு..! என்ன செய்யபோகிறாா் றிஷாட்?

ஆசிரியர் - Editor I
ஆசைப்பட்டு வாங்கிய பதவிக்கு மீண்டும் ஆப்பு..! என்ன செய்யபோகிறாா் றிஷாட்?

மீண்டும் அமைச்சு பதவியை பெற்றிருக்கும் அமைச்சா் றிஷாட் பதியூதீனின் பதவியை பறிக்கும் நோக்கில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

ரிசாட் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவர் மீது சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவுள்ளோம்.

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு