ஒருநாள் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார் இலங்கை வீரர் மலிங்கா

ஆசிரியர் - Admin
ஒருநாள் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார் இலங்கை வீரர் மலிங்கா

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா சதம் (111 ரன், 99 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

மெகா இலக்கை நோக்கி களம் புகுந்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தமிம் இக்பால் (0), சவும்யா சர்கார் (15 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் தாக்குதலில் கிளீன் போல்டு ஆனார்கள். சரிவில் இருந்து அணியை மீட்க முஷ்பிகுர் ரஹிம் (67 ரன்), சபீர் ரகுமான் (60 ரன்) போராடிய போதிலும் பலன் இல்லை.

இறுதியில், வங்காளதேச அணி 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு அடங்கியது. இதன்மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியோடு அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும் அவர் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து ஆடுவார்.

லசித் மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு