வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிரதேசத்தில்:
இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். உடுவில் ஆர்க் லேன், அம்பலவாணர் வீதி, மாதகல், காஞ்சிபுரம், குசுமாந்துறை, காட்டுப்புலம், யம்புகோளப் பட்டிணம், யம்புகோளப் பட்டிணம் வாடி வீடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.