வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி வாகிசசாலை, வல்லை, பொக்கணை, கெருடாவில், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயம், வளலாய், மயிலியதனை சிதம்பராக் கல்லூரி, காளி கோவிலடி, வதிரி, தேவரையாளி, திக்கம், சித்திவிநாயகர் கோவிலடி, மனோகரா ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு