கிளிநொச்சியை உலுக்கிய 22 வயது இளைஞரின் மரணம்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தின் கீழ் இருந்து ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞர் அதிகவேகத்தில் உந்துருளியில் சென்றமையால் கட்டுப்பாட்டையிழந்து பாலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் எனவும் காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞர் தொடர்பில் நீதவான் விசாரணைகள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.<