தமிழா்களை கத்தோலிக்கா்கள் என்றும், இந்துக்கள் என்றும் பிாிப்போா் பௌத்த மத திணிப்பு குறித்து பேச தகுதியற்றவா்கள்..!

ஆசிரியர் - Editor I
தமிழா்களை கத்தோலிக்கா்கள் என்றும், இந்துக்கள் என்றும் பிாிப்போா் பௌத்த மத திணிப்பு குறித்து பேச தகுதியற்றவா்கள்..!

மன்னார் மாவட்டத்தில், தமிழர்களை “இந்துக்கள்” என்றும், “கத்தோலிக்கர்கள்” என்றும் பிரித்து பலவீனப்படுத்தும் தமிழினத்துரோக செயல்களை கண்டும் காணாதது போன்று இருப்போர் முல்லை நீராவியடியிலும், 

திருமலை கன்னியாவிலும் “சிங்கள-பெளத்த” ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தார்மீக உரிமைகளை இழக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு நல்லிணக்க அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். இந்த விடயம் குறித்து அவா் தனது முகப்புத்தகத்தில் செய்துள்ள பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

மன்னார் தமிழ் மக்களை அரசியல், மத, சமூக அடிப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் எனது இந்த நிலைப்பாட்டில் புதைந்துள்ள அடிப்படை நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்வு காரணமாக, இந்நாட்டில் தமிழர் ஜனத்தொகை ஏற்கனவே கணிசமாக குறைந்து விட்டது. இந்நிலையில் எஞ்சி இருக்கும் தமிழர்களும் மத, பிரதேச, ஜாதி அடிப்படைகளில் பிரிந்து, நாசமாகி அழிவதையே தமிழின எதிரிகள் மனதார விரும்புகிறார்கள்.

இதற்காக எதிரிகள் இன்று நம் தமிழர்களையே விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். எவருக்கு இது தெரியாவிட்டாலும் கூட எனக்கு இவற்றை புரிந்துக்கொள்ளும் அறிவு இருக்கிறது.

அரசியல், சமூக, மத பொறுப்புகளில் இருக்கும் இந்த “தமிழர்கள்” யார் என்றும், இவர்களை பயன்படுத்துகின்ற “எதிரிகள்” யார் எவர் என்றும் எனக்கு தகவல்கள் கிட்டியுள்ளன.

எமது இனத்துக்குள்ளேயே இருந்துக்கொண்டு எம்மையே பிரிக்க, எதிரிக்கு துணை போகும் நபர்களை வரலாறு மன்னிக்காது.

தமிழின ஒற்றுமையை வேண்டி நிற்கும், தமிழ் வளர்ந்தோரையும், இளையோரையும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு