மட்டக்களப்பில் பதற்றம்..! பொலிஸாா் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கியை பறித்து சென்ற கும்பல்.. இராணுவம், பொலிஸ் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பில் பதற்றம்..! பொலிஸாா் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கியை பறித்து சென்ற கும்பல்.. இராணுவம், பொலிஸ் குவிப்பு..

மட்டக்களப்பு - புதுாா் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரை தாக்கிவிட்டு அவாிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்து சென்ற நபரை இராணுவம், பொலிஸாா் இணைந்து தேடி வருகின்றனா். 

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினா் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வரும் நிலையிலேயே அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளைஞர் ஒருவரை இரண்டு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்று பிடிக்க முற்பட்டபோது குறித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் குறித்த போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கு நின்ற சிலரால் குறித்த போக்குவரத்து பொலிஸார் இருவரும் தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுன் தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு