அடுப்பு பற்றவைத்த பெண் மீது பற்றிய தீ..! 2 பிள்ளைகளின் தாய் பாிதாபகரமாக மரணம்..

ஆசிரியர் - Editor I
அடுப்பு பற்றவைத்த பெண் மீது பற்றிய தீ..! 2 பிள்ளைகளின் தாய் பாிதாபகரமாக மரணம்..

அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்பில் ஊற்றிய மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து எாிந்த நிலையில் 2 பிள்ளைகளின் தாய் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். 

குறித்த சம்பவத்தில் இலங்கேஸ்வரன் - ஜெனிற்றா , வயது 30 என்னும் இரு பிள்ளைகளின் தாயாரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

மன்னார் - விளாத்திகுளம் , மடுப் பகுதியில் கடந்த 24ம் திகதி வீட்டில் சமயலில் ஈடுபட்டிருந்த சமயம் அடுப்பில் மண்ணென்ணை ஊற்றியுள்ளார். 

அவ்வாறு ஊற்றிய எண்ணை குறித்த தாயார் அணிந்திருந்த ஆடையில் பட்டமையினால் ஆடையில் தீ பரவியது. 

இதனால் தீயில் அகப்பட்ட பெண்மணியை உடனடியாக மீட்டு வவுனியா வைத்மியசாலையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் மேலதிக சிகிச்சையின் பொருட்டு கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 01ம் திகதி பரிதாபகரமாக உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணையை 

திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு