மன்னாா் விபத்தில் படுகாயமடைந்த மற்றய இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
மன்னாா் விபத்தில் படுகாயமடைந்த மற்றய இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

மன்னார் தாராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் கார்லஸ் மேரிடயஸ் - கார்லிங்டயஸ் என்னும் 22 வயதினையுடைய தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

மன்னாா்- தாராபுரம் பகுதியில் உந்துருளியில் பயணித்த நிலையில் முன்னே பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட சமயம் 

எதிர்த் திசையில் வேகமாக பயணித்த இ.போ.ச பேரூந்துடன் மோதி சுமார. 23 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தார்.

இவ்வாறு படுகாயமடைந்தவரை உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரவு 7 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் 

8 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாப்பரமாக உயிரிழந்தார். இந்த இளைஞனுடன் விபத்தில் சிக்கிய மற்றொரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு