நீராவியடி பிள்ளையாா் ஆலய பொங்கல் திருவிழாவை குழுப்ப சதி..! சிங்கள இனவாத அமைப்புக்களும் முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டன..

ஆசிரியர் - Editor I
நீராவியடி பிள்ளையாா் ஆலய பொங்கல் திருவிழாவை குழுப்ப சதி..! சிங்கள இனவாத அமைப்புக்களும் முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டன..

முல்லைத்தீவு- செம்மலை நிராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் தமிழ் மக்கள் தமது உாித்தை நிலைநாட்டும் வகையில் பொங்கல் விழா ஒன்றை நடாத்தவிருந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் அங்குள்ள பௌத்த துறவியால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பௌத்த துறவி பிரித் ஓதும் வழி­பாட்டை இன்­று­மு­தல் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ ளார். நீர­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யத்­தின் பொங்­கல் நிகழ்வு நாளை­ம­று­தி­னம் கோலா­க­ல­மாக நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன.

இதனை முன்­னிட்டு கொக்­குத்­தொ­டு­வாய் கோட்­டைக்­கேணி பிள்­ளை­யார் ஆல­யத்­தில் இருந்து பாரம்­ப­ரிய முறைப்­படி மடைப்­பண்­டம் எடுத்து வரப்­பட்டு 108 பானை­க­ளில் பொங்­கல் நிகழ்­வு­ கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்தே அந்­தப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த குறித்த விகா­ரை­யில் பிரித் ஓதும் வழி­பா­ டு­களை மேற்­கொள்ள குறித்த பிக்கு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளார். இதற்­காக சிங்­கள ராவய அமைப்­பின் தலை­வர்­க­ளும் அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு