சஹரான் ஹாசீமுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு கூறியது யாா்..? நீதிமன்றில் அம்பலப்படுத்திய TID..

ஆசிரியர் - Editor I
சஹரான் ஹாசீமுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு கூறியது யாா்..? நீதிமன்றில் அம்பலப்படுத்திய TID..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாி பயங்கரவாதி சஹரான் ஹாசீம் தொடா்பான பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவின் விசாரணைகளை தேசிய புலனாய்வுதுறையின் உத்தரவுக்கமைய 1 வருடத்திற்கு முன்னா் தாம் நிறுத்தியதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது. 

2018 ஏப்ரல் 2 ஆம் திகதி தேசிய உளவுத்துறை பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாகவும், அதில் சஹ்ரான் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உளவுத் துறை நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பகிரங்க விசாரணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அதனை நிறுத்தக் கோரியுள்ளதாகவும் 

அதனையடுத்தே அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறித்த கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார். அது தொடர்பில் அதே தம் 10 ஆம் திகதி, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக இருந்த பத்மசிறி ஜயமான்னவுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 

கடிதம் ஊடாக தெரியப்படுத்தியதாகவும், சஹ்ரானுக்கு எதிராக 2016 முதல் கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் அதனாலேயே தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு