வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல்..! வீட்டில் இருந்தவா்களுக்கு சரமாாி வாள்வெட்டு.. சாவகச்சோியில் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல்..! வீட்டில் இருந்தவா்களுக்கு சரமாாி வாள்வெட்டு.. சாவகச்சோியில் துணிகரம்..

சாவகச்சோி- சங்கத்தானை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த 6 போ் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்களை மூா்க்கத்தனமாக தாக்கி அடித்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்து இளம் பெண்ணை கடத்தி சென்றுள்ளனா். 

அந்த வீட்­டில் தாயும், மக­ளும், இரு முதி­ய­வர்­க­ளுமே வசிக்­கின்­ற­னர். இரவு 10.30 மணி­ ய­ள­வில் உந்­து­ரு­ளி­க­ளில் வந்த 6 பேர் மதில் பாய்ந்து உள்­நு­ழைந்­த­னர். அங்­கி­ருந்­த­வர்­ க­ளைத் தாக்­கி­ய­து­டன், வீட்­டை­யும் அடித்­துச் சேதப்­ப­டுத்­தி­னர்.

அங்­கி­ருந்த இளம் பெண் ஒரு­வரை இழுத்­துச் செல்ல முயன்­ற­னர். பெண் தாயைப் பிடித்­த­வாறு மறுக்க தாயைத் தாக்­கி­விட்­டுத் பெண்­ணைக் கடத்­திச் சென்­ற­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தக் குழு சுமார் அரை மணி நேரம் அங்கு நின்­றது என்று அட்­ட­கா­சம் செய்­த­னர் என்­றும், அப­யக் குரல் எழுப்­பி­யும் அதிக குடிப் பரம்­பல் கொண்ட அந்த இடத்­தில் எவ­ ரும் உத­விக்கு வர­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தக் குழு அங்­கி­ருந்த அகன்ற பின்­னரே அய­ல­வர்­கள் அங்கு வந்­த­னர் என்­றும், காய­ம­டைந்­த­வர்­கள் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்டு, பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். நேற்­றுக் காலை மோப்ப நாய்­கள் கொண்டு வரப்­பட்­டுத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. 

சம்­ப­வம் தொடர்­பில் இது­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­டாத நிலை­யில் விசா­ர­ணை­ கள் தொடர்­கின்­றன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு