முஸ்லிம் வா்த்தகா்களுக்கு தடை..! சிக்கலில் மாட்டினாா் பிரதேசசபை தவிசாளா்..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் வா்த்தகா்களுக்கு தடை..! சிக்கலில் மாட்டினாா் பிரதேசசபை தவிசாளா்..

வென்னப்புவ பிரதேசசபைக்குட்பட்ட வார சந்தையில் முஸ்லிம் வியாபாாிகள் வியாபாரம் செய்ய தடைவிதித்தமை தொடா்பில் விளக்கமளிக்குமாறு மராவில நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைத் தவிசாளர் சுசந்த பெரேராவுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

தங்கொட்டுவ வாரச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்று பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு