திடீா் சோதனை..! மௌலவி வீட்டிலிருந்து பெருமளவு பொருட்கள் மீட்பு, மௌலவியை கைது செய்ய நீதிமன்ற அனுமதி கேட்பு..

ஆசிரியர் - Editor I
திடீா் சோதனை..! மௌலவி வீட்டிலிருந்து பெருமளவு பொருட்கள் மீட்பு, மௌலவியை கைது செய்ய நீதிமன்ற அனுமதி கேட்பு..

ஹம்பகா- மாகொல பாத்திமா என்ற பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனை நடவடிக்கையின்போது மௌலவி ஒருவாின் வீட்டுக்குள்ளிருந்து சிம் அட்டைகள் மற்றும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

மாகொல பாத்திமா என்ற பிரதேசத்தில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரையிலான 6 மணித்தியாலங்களாக இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மௌவி ஒருவர் தங்கியிருந்த அறையில் 

பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேற்பகுதிகள், இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகள், பல்வேறு கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் 29 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பின் போது குறித்த மௌலவி அந்த அறையில் இருக்கவில்லை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு