அலாி மாளிகையில் எழுதப்பட்ட தொிவுக்குழு நாடகத்தில் நாங்கள் பங்குபற்ற மாட்டேன்..!

ஆசிரியர் - Editor I
அலாி மாளிகையில் எழுதப்பட்ட தொிவுக்குழு நாடகத்தில் நாங்கள் பங்குபற்ற மாட்டேன்..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாக ஆராயும் நாடாளுமன்ற தொிவு குழு ஒரு நாடகம் என கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா, 

தொிவுக்குழு முன்னிலையில் வருமாறு என்னை எவரும் அழைக்கவில்லை. அழைத்தாலும் செல்லபோவதில்லை எனவும் கூறியிருக்கின்றாா். 

ஊடகப் பிரதானிகளுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைள் வெறும் நாடகம்.

இந்த நாடகத்திற்கான பிரதி, அலரி மாளிகையில் எழுதப்படுகின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அவ்வாறு அழைப்பு விடுத்தாலும் தாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாக போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு