நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் மீது துப்பாக்கி சூடு..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் மீது துப்பாக்கி சூடு..

நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு கைதிகள் இருவா் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில், தப்பி ஓடியவா்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸாா் துரத்தி பிடித்துள்ளனா். 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர் சிறைக் காவலர்களின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சிறைக் காவலர்கள் அவர்களை விரட்டிச் சென்று வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு