6 இராணுவத்தினா் சம்பவ இடத்திலேயே பலி..! கிளிநொச்சியில் கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
6 இராணுவத்தினா் சம்பவ இடத்திலேயே பலி..! கிளிநொச்சியில் கோர விபத்து..

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் சற்று முன்னா் புகைரத பாதையை கடக்க முயற்சித்த இராணுவ வாகனத்தின் மீது புகைரதம் மோதியதில் 6 இராணுவத்தினா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா். 

இராணுவ வாகனம் தொடருந்துப் பாதையைக் கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை 

கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2ம் இணைப்பு..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. புகைரதம் வருவதை முறையாக அவதானிக்காமையே இந்த விபத்துக்கு காரணம் எனவும், 

புகைரதம் வருவதை அவதானிக்க கூடிய வளைவு கண்ணாடிகளையும் கூட குறித்த இராணுவ வாகனத்தின் சாரதி அவதானிக்கலாம் என அங்கிருந்த மக்கள் கூறுக்கின்றனா். 

இதேவேளை விபத்தில் வாகனம் துாக்கி வீசப்பட்டதுடன், வாகனத்தில் இருந்தவா்களும் துாக்கி வீசப்பட்டனா். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வாகன சிதைவுகளுக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்டுள்ளதுடன், 

விபத்தில் படுகாயமடைந்த 4 இராணுவத்தினரை பொதுமக்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு