முஸ்லிம் வியாபாாிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை..! இன வெறுப்பை காட்டும் வென்னப்புவ பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் வியாபாாிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை..! இன வெறுப்பை காட்டும் வென்னப்புவ பிரதேசசபை..

வென்னப்புவ- தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாாிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடைவிதித்துள்ளது. 

இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,

குறித்த கடிதத்தில் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து, 

குறித்த பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப் பகுதிக்கு வருவதற்கு, 

ஏனைய மக்களும் வியாபார சமூகமும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், பிரதேச சபைத் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன்பிரகாரம், தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக 

தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு