அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..! இறுதியில் மூக்குடைபட்டாா்..

ஆசிரியர் - Editor I
அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்த அதிமேதாவி ஆளுநா்..! இறுதியில் மூக்குடைபட்டாா்..

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகாித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளா்களை அங்கிருந்து வெளியாறுமாறு ஆளுநா் கூறியிருந்ததுடன், ஊடகங்கள் மக்களுக்காக சேவை செய்யவில்லை. எனவும் கூறியிருக்கின்றாா். 

குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் இந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு ஊழியர்கள் கலந்துரையாடும் விடயம் எனவும் ஊடகங்கள் இருக்கத் தேவையில்லை எனவும் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு பணித்துள்ளார். இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் 

இதுவரை காலமும் ஊடகங்களின் முன்னிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது. அந்த வழமையை மாற்றவேண்டாம் மற்றும் அரசாங்க ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேறவேண்டும் என கூறுவது பொருத்தமல்ல என தெரிவித்துள்ளார்.

இதுக்கு பதில் தெரிவித்த ஆளுநர் அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வெளியேற்றுவோம் என தெரிவித்தார். இடையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் அவ்வாறு வெளியில் அனுப்ப முடியாது, 

ஊடகங்களுக்கு பயப்பட வேண்டிய தேவையில்லை இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மக்கள் அறியவேண்டும் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்கள் அறியவேண்டும் என கூறியுள்ளார். இதன்போது மீண்டும் சிவசக்தி ஆனந்தன் எம் பி 

19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது என தெரிவித்தார். இதனையடுத்து ஆளுநர் சிவசக்தி ஆனந்தன் எம் பியிடம் ஆம் அவ்வாறு சட்டம் இருக்கின்றது உண்மை ஆனால் ஒவ்வொரு கூட்டத்தையும் ஒவ்வொரு 

பேச்சுவார்த்தையையும் அறிய வேண்டும் என இருக்கின்றதா? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் ஆம் கட்டாயம் அவ்வாறு அறியவேண்டும் இங்கே நடைபெறும் விடயங்களை இங்கே பேசப்படும் விடயங்களை இந்த மாவட்டத்தின் மக்கள் அறியவேண்டும். 

அந்த மக்களுக்கு அது தெரியவேண்டும். நாங்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை பற்றித்தான் பேசுகின்றோம் வேற ஒருவிடயங்களை பற்றியும் பேசவில்லை எனவே இந்த விடயங்களை மக்கள் அறியவேண்டும் ஆகவே ஊடகங்களை அனுமதியுங்கள். 

இந்த அரசாங்கத்தில் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும், தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. இந்த நிலையில் தனியார் ஊடகங்களை மட்டும் வெளியேற்றுவது தவறானது என தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் நான் ஊடக எதிர்ப்பாளன் அல்ல 

இங்கே நடைபெறும் விடயங்களை நான் பார்வையிடுகின்றேன் நீங்கள் கூட்டத்தை நடாத்துங்கள் நான் ஊடகங்களுக்கு பேசவரவில்லை என தெரிவித்துவிட்டு அமர்ந்துகொண்டார். இதனால் சிறிதுநேரம் கூட்டத்தின் இடையே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களையடுத்து ஊடகங்களுக்கு தமது பணியை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு