நயினாமடுவிலிருந்து வவுனியா சென்ற இரு சிறுவா்களை காணவில்லை..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
நயினாமடுவிலிருந்து வவுனியா சென்ற இரு சிறுவா்களை காணவில்லை..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

நெடுங்கேணி- நயினாமடு கிராமத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு சென்ற இரு சிறுவா்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவா்களின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சிறுவர்கள் நேற்று முந்தினம் முதல் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் 

வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா காவல் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

19 வயதுடைய விஜயசுந்தர் தர்சன் வயது, 16 வயதுடைய விஜயசுந்தர் நிதர்சன் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு