தீவிரவாதிகளுடன் தொடா்புகளை பேணிய முக்கியஸ்த்தா் யாா்..? அடுத்தவாரம் ரணகளம் இருக்காம்..

ஆசிரியர் - Editor I
தீவிரவாதிகளுடன் தொடா்புகளை பேணிய முக்கியஸ்த்தா் யாா்..? அடுத்தவாரம் ரணகளம் இருக்காம்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடா்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சவுதியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 5 போிடம் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் அவர்களிடம் இருந்து முக்கியமான அதிர்ச்சித் தகவல்கள் பல கிடைத்துள்ளன. அவர்களின் தொடர்பாடல் சாதனங்களும் பகுப்பாய்வுக்கு உள்வாங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் முக்கியமான பல விடயங்கள் அடுத்த வாரம் வெளியாக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக விசாரணைகளுடன் 

தொடர்புடைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைமையுடன் அல்லது தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்த தரப்புடன் தொடர்பில் இருந்த இலங்கையர் யார்? 

என்ற விவரங்கள் குறித்துத் தற்போது துப்பு துலக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு