காணாமல்போயிருந்த முதியவா் காட்டில் சடலமாக மீட்பு..! பலகோணங்களில் விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த முதியவா் காட்டில் சடலமாக மீட்பு..! பலகோணங்களில் விசாரணை தீவிரம்..

காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முதியா் புளியங்குளம்- பொியமடு காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த இளசிங்கம் தேவராசா (வயது74) என்பவா் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில்,

தொடா்ச்சியாக தேடப்பட்டுவந்ததுடன், உறவினா்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தனா். 

இந்நிலையில் புளியங்குளம்- பொியமடு காட்டுப்பகுதியிலிருந்து குறித்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு