மனைவி மீது சந்தேகம்..! தலையில் வெங்காய வெடியை வைத்து கொலை செய்த கணவன்.. வவுனியாவில் கொரூரம்.

ஆசிரியர் - Editor I
மனைவி மீது சந்தேகம்..! தலையில் வெங்காய வெடியை வைத்து கொலை செய்த கணவன்.. வவுனியாவில் கொரூரம்.

வவுனியா- செட்டிகுளம் பகுதியின் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியின் தலையில் வெங்காய வெடி வைத்து கொலை செய்துள்ளாா். 

இந்தச் சம்பவம் வவுனியா செட்டிகுளம் கங்கங்குளம் கிராமத்தில் நடந்துள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வெங்காய வெடி எனத் தெரிவிக்கப்படும் 

உள்ளுரில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வெடியைப் பயன்படுத்தி மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு