நீடிக்கப்பட்டது அவசரகால சட்டம்..! கூட்டமைப்பு எம்.பிக்கள் இப்போதும் துாக்கம்..

ஆசிரியர் - Editor I
நீடிக்கப்பட்டது அவசரகால சட்டம்..! கூட்டமைப்பு எம்.பிக்கள் இப்போதும் துாக்கம்..

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வா்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்காரணமாக அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அது நீடிக்கப்பட்டால் அதனை நாம் எதிா்ப்போம் என கூட்டமைப்பு கூறியது. 

ஆனால் 2வது தடவையாக அது நீடிக்கப்படும் நிலையில் கூட்டமைப்பு தொடா்ந்தும் மௌனமாக இருந்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு